புதுதில்லி : தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தில்லி உயர்நீதிமன்ற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்க பொறுப்பில் இருந்த போது, நிதி மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து, ஆம் ஆத்மி தலைவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால், ராகவ் சாதா, குமார் விஸ்வாஸ், அசுதோஷ், சஞ்சய் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக, 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, அருண் ஜெட்லி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.