பிகார் தலைநகர் பாட்னாவில் நடந்த யாக பூஜை நிகழ்சியில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், அவரது குடும்பத்தினருடன் பங்கேற்றார். லாலுவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத்தும் இதில் பங்கேற்றிருந்தார்.
அப்போது, மேடையில் லாலு பிரசாத் அமர்ந்திக்கும் போது அவரது கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் மேடை ஏறினர். இதனால், பாரம் தாங்காமல் மேடை திடீரென சரிந்து விழுந்ததில், லாலு பிரசாத் உள்ளிட்டோர் கீழே விழுந்தனர்.
குறிப்பாக, லாலு பிரசாத் லேசான காயமடைந்தார். இதையடுத்து, நெரிசலில் இருந்து அவரை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு எந்த தீவிர பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து, சில மணிநேர ஓய்வுக்குப் பின் மீண்டும் வீடு திரும்பினார்.