புதுதில்லி: தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு சந்தித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் சென்றனர்.