மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகை

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகை

புதுதில்லி: மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை சென்னையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் 31-ம் தேதி தில்லி செல்கிறார்.

தனது இந்தியப் பயணம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ,” 5 நாள் பயணமாக இந்தியா செல்ல இருக்கிறேன். இந்தியா 1957 முதல் மலேசியாவுடன் நெருங்கிய நண்பனாக உள்ளது.

இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர் நோக்கி உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஏப்ரம் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை  சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்தும் பல்வேறு உலக நடப்புகள் குறித்தும் பேச இருப்பதாக தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com