புதுதில்லி: மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை சென்னையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் 31-ம் தேதி தில்லி செல்கிறார்.
தனது இந்தியப் பயணம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ,” 5 நாள் பயணமாக இந்தியா செல்ல இருக்கிறேன். இந்தியா 1957 முதல் மலேசியாவுடன் நெருங்கிய நண்பனாக உள்ளது.
இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர் நோக்கி உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஏப்ரம் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்தும் பல்வேறு உலக நடப்புகள் குறித்தும் பேச இருப்பதாக தெரிகிறது.