தியேட்டரில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வலம்புரி ஜான் மகன் கைது

சென்னை வண்ணாப்பேட்டையில் திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவருக்கு அநாகரீகமான முறையில் தொல்லை கொடுத்ததாக பிரச்னை

சென்னை: சென்னை வண்ணாப்பேட்டையில் திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவருக்கு அநாகரீகமான முறையில் தொல்லை கொடுத்ததாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் திரையரங்கம் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரித்த போலீஸார், முன்னாள் எம்.பி வலம்புரி ஜானின் மகன் ஜூடு கிரண் பிரபு நண்பர் ஒருவருடன் சேர்ந்துகொண்டு பெண் ஒருவரிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து ஜூடு கிரண் பிரபு மற்றும் அவரது நண்பர் மீதும் பாலியல் வழக்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com