ஹைதராபாத்: ஆந்திரா மாநில அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜூப்லி மலைப்பகுதியில் நண்பர் ராஜாவிடம் நிஷிடம் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா மற்றும் அவரது நண்பர் ராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.