தற்போதைய செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் : 2 பேர் பலி - 15 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூல்: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பட்ரிகா மாகாணத்தில உள்ள கார்டெஸ் நகரில் நியூ காபூல் வங்கிக் கிளை ஒன்றில் இன்று மதியம் 2.30 மணியளவில் தீவிரவாதி ஒருவன் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினான். இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாதரத்துறை கூறியுள்ளது.
மேலும் ஒரு தீவிரவாதி வங்கிக்குள் வெடிபொருட்களை வீசியதாகவும் அவன் இன்னும் வங்கிக்குள்ளேயே பதுங்கியிருப்பதாகவும் அந்நாட்டு ஊடக செய்தியறிக்கை தெரிவிக்கிறது.