மெரினா கடற்கரையில் சட்ட விதியை மீறி கூடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சட்டவிதிகளுக்கு மாறாக மெரினாவில் குழுவாக கூடுவது. கூட்டங்கள் நடத்துவது சட்டவிரோதமாகும். சென்னை மாநகர காவல் சட்டவிதி 41-ஐ மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.