கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்த நிதியாண்டில் தொடங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்த நிதியாண்டில் தொடங்கப்படும் என தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்த நிதியாண்டில் தொடங்கப்படும் என தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள ஜி.எஸ்.டி. மசோதா குறித்து கோவையில் தொழிலதிபர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்களது பிரச்னைகளை தீர்க்க அனைத்து வகையான உதவிகளையும் அளிப்பதாக உறுதிஅளித்தார்.

சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தல் பிரச்சினை குறித்து உரிமையாளர்களுடன் தனித்தனியாக சந்தித்து விவாதித்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

மேலும் கோவை நகரின் முக்கிய நீராதாரமாக இருப்பது சிறுவானி நீர் தேக்கம். இந்த அணையை தூர்வார முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com