புதுதில்லி: தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பில் குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. எனினும் கங்கையை சுத்தப்படுத்துவது தொடர்பாக பிரதமருடன் பேசியதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது.
அதில் 17 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.