புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் கடந்த 7 மாதங்களில் நேரடி வரிவசூல் வசூல் 15.2% உயர்ந்து ரூ4.39 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி வசூலில் தனிப்பட்ட வருமான வரி மற்றும் பெருநிறுவன வரியும் உள்ளடக்கியது எனவும் 2017-18 க்கான நேரடி வரி வசூல் மொத்த வரவு ரூ .9.8 டிரில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வரை மொத்த வரவு செலவுத் திட்ட மதிப்பில் 44.8% வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதிக்கான நிகர வசூலை விட 15.2 சதவிதம் அதிகம் என்று நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.