மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேரமுடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 151.95 புள்ளிகள் குறைந்து, 33,218.81 புள்ளிகளாக இருந்தன.
அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 10,303.15 புள்ளிகளாக இருந்தன. பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 3.75%, 3.54%, 2.73%, 2.16% சரிந்து காணப்பட்டன.
அதேசமயம் ஆக்ஸிஸ் வங்கி, ஆசிய பீஸ்ட்ஸ் மற்றும் சிபலா ஆகியவற்றின் பங்குகள் முறையே 3.34%, 2.78% 2.28 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.