சென்னை: சென்னை வேளச்சேரியில் ஒருதலைக் காதலால் இளம் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் நேற்று திங்கள்கிழமை இரவு (நவ.13) வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, தன்னை காதலிக்க மறுத்த இந்துஜா என்பவரை ஆகாஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் இந்துஜா, அவரது தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதா மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரை காப்பாற்ற முயன்ற இந்துஜாவின் தாயார் ரேணுகா மற்றும் தங்கை நிவேதிதா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைமறைவான ஆகாஷை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒருதலைக்காதல் விரக்தியால் காதலிக்கும் பெண்ணின் வீட்டை பெட்ரோல் ஊற்றி காதலன் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.