எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 17-ம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிழக்கு மற்றும் மேற்குக்கரை வாய்க்கால்களிலிருந்து நீர் திறக்கப்படுவதால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.