சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக ம.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.