மணல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை. 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தஞ்சை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் புதிதாக 70 மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் தட்டுப்பாடை தடுக்கவும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.