ஆர்.கே நகர் வேட்பாளர் தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி அணிக்கு ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆதாரத்தின் அடிப்படையிலேயே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அம்மாவின் ஆசியினால் இரட்டை இலை எங்களுக்கு கிடைத்துள்ளது. பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால் இரட்டை இலை எங்களுக்கு கிடைத்திருப்பதாக கூறுவது தவறு என்றும் பழனிசாமி கூறியுள்ளார்.