அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது விழுந்து நொறுங்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
டவாங் மாவட்டத்தில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17 V5 ஹெலிகாப்டரில் வீரர்கள் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த மற்ற இரு வீரர்களும் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.