விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது விழுந்து நொறுங்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது விழுந்து நொறுங்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

டவாங் மாவட்டத்தில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17 V5 ஹெலிகாப்டரில் வீரர்கள் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த மற்ற இரு வீரர்களும் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com