ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்சேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
நேற்று இரவு முதல் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதால் பொதுமக்களிடையே அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது.