அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு மூன்றாம் உலகப் போருக்கு ஜப்பான் தயாரானால் அந்த நாட்டை தவிடுப்பொடியாக்கி விடுவோம் என்று வடகொரியா இன்று எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, வடகொரியா அரசுக்கு ஆதரவான செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
கொரிய தீபகற்பத்தில் போர் வெடித்தால் ஜப்பானால் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. போருக்காக அங்கு நிலைநிறுத்தப்படும் (குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் உள்பட) அனைத்தும் தவிடுப்பொடியாகி விடும்.
அமெரிக்காவின் ஆதரவு என்ற பலத்துடன் போருக்கான ஆயத்தத்தில் ஜப்பான் ஆட்சியாளர்கள் இறங்கினால் மீளமுடியாத துரதிர்ஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை கடுமையாக எச்சரிக்க விரும்புகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.