டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவர், தனது முதல் சுற்றில் சீன வீராங்கனை சென் யுபெய்யை எதிர்கொண்டார்.
இதில் 17-21, 21-23 என்ற நேர் செட்களில் சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் அவர் டென்மார்க் ஓபனில் இருந்து வெளியேறினார்.