வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அத்திமகுலாப்பள்ளியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அத்திமகுலாப்பள்ளியில் நேற்றிரவு 8.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.