வேலூர் அருகே பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அத்திமகுலாப்பள்ளியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அத்திமகுலாப்பள்ளியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அத்திமகுலாப்பள்ளியில் நேற்றிரவு 8.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com