சென்னை: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை (செப்.5) நடக்க உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை நடக்க உள்ளது.
அத்துடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.