கர்நாடக மாநில டி.ஐ.ஜி.ரூபாவுக்கு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஐ.ஜி ரூபாவுக்கு ஆளுநர் பதக்கத்தை வழங்கியுள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.
இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.