முன்னாள் இந்திய விமானப்படை தளபதி அர்ஜன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அர்ஜன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்திய விமானப்படை அர்ஜன் சிங்கின் வழிகாட்டுதல்களை என்றும் நினைவில் வைக்கும். அர்ஜன் சிங் அர்ப்பணிப்புகளை நாடு எப்போதும் மறவாது. விமானப்படையின் கட்டமைப்புக்கு மிகவும் பாடுபட்டவர் மார்ஷல் அர்ஜன் சிங். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.