இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் காலமானார். அவருக்கு வயது 98-வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தில்லியில் உள்ள ராணுவ சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி தில்லி மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.
1965-ம் ஆண்டு இந்தியா-பாக்கிஸ்தான் போரில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்திய விமானப் படையில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.