காரைக்குடியில் வரும் 30-ம் தேதி  தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.09.17 சனிக்கிழமை அன்று நடைபெற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியில் வரும் 30-ம் தேதி  தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் 

சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.09.17 சனிக்கிழமை அன்று நடைபெற்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சிசார்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில்  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30.09.17 சனிக்கிழமை  காலை 8,45 மணியளவில் நடைபெற உள்ளது.

அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டடமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான், ஆகிய மாநில கழக செயலாளர்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாவமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com