இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
சென்னையில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்று இரவும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் போட்டி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனினும் இன்று பிற்பகல் ஒன்றரை மணியளவில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ள இந்த போட்டியை முன்னிட்டு சென்னை நகரில், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.