பசுபிக் பெருங்கடலில் 18-வது புயலாக தாலிம் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் ஜப்பானின் தெற்கு பகுதிகளில் உள்ள தீவான யுஷு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகமாக காற்று வீசும் எனவும், நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 644 உள்ளூர் விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் உள்பட நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சூறாவளி புயல் காரணமாக தலைநகர் டோக்கியோ உட்பட பல இடங்களில் கடும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.