இந்தியாவின் மூத்த தடகள வீரர் கவுருக்கு விசா வழங்க சீனா மறுப்பு

ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சீனா தனது விசாவை வழங்க மறுத்துவிட்டது
இந்தியாவின் மூத்த தடகள வீரர் கவுருக்கு விசா வழங்க சீனா மறுப்பு

ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள சீனா தனது விசாவை வழங்க மறுத்துவிட்டது என்று 101 வயதான இந்திய வீரர் கவுர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 101 வயது இந்திய பாட்டி 74 நொடிகளில் ஓடிக்கடந்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆக்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் போட்டியில் 100 மீட்டர் தங்கம் வென்ற பிறகு கவுர் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக  தனது சொந்த மாநிலமான பஞ்சாபில் கடுமையாக பயிற்சி பெற்றார்.

எனினும் அவரது விசா மறுக்கப்பட்டதும் நான் மிகவும் கவலையடைந்தேன் ஆனாலும் இது முடிவு அல்ல நான் எனது  பயிற்சியை தொடருவேன் எதிர்காலங்களில் போட்டியிடுவேன் என்று அவர் கூறினார் .

முதிய வயதில் தடகளப்போட்டியில் பங்கேற்று வரும் கவுர் இதோடு 17 தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com