புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே - சதாரா தேசிய நெடுஞ்சாலையின் கண்டாலா அருகே சாலையோர தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர் தகவல் வெளியாகி உள்ளது.
காயமடைந்தவர்களில் இதுவரை மீட்கப்பட்ட 15 அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான லாரியில் எத்தனை பேர் வந்தனர் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.