நேபாளம்: காத்மண்டுவில் இந்திய தூதரகம் முகாம் அலுவலகம் அருகே குண்டுவெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது
காத்மாண்டு அருகே பிரத்நகரில் இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சக்தி குறைந்த குண்டு வெடித்ததால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பிரத்நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து எதுவும் வெளியிடவில்லை.