கோவை: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிப்பதை எச்.ராஜா, எஸ்வி.வி.சேகர் உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எஸ்.வி.சேகர் பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் டுவிட்டர் பதிவிட்டது குறித்து
கேட்டபோது, அதுகுறித்து தெரியாது என்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி குறித்து எச். ராஜா தனது டுவிட்டரில் இழிவாக கருத்து தெரிவித்து உள்ளாரே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கும் நான் டுவிட்டரை பார்க்கவில்லை என கூறினார்.
பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து கூறி வருகிறார்களே? என கேட்ட போது, பெண்களை இழிவுப்படுத்த கூடாது என்பதே என் கருத்து. இந்த மாதிரியான விஷயத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.
ஒரு பெண் ஆளுமையின் கீழ் இருந்த தாங்கள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க முடியாமல் உங்களை தடுப்பது எது? ஏன் கண்டனம் தெரிவிக்க முடியவில்லை? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் எதுவும் அளிக்கமால் தம்பிதுரை சென்று விட்டார்.