லம்பாக்: இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் என்ற தீவின் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது மக்களிடம் அச்சம் நிலவி வருகிறது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் எந்த விபத்து அல்லது காயங்கள் குறித்த உடனடி தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்தோனேசியா பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு பகுதியான ரிங்க் ஆஃப் ஃபயர் என்ற இடத்தில் உள்ளது, இது அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடந்த வாரம் இந்தோனேசியாவின் கிழக்கு இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.