மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவ மழையின் காரணமாக கா்நாடக அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. உபரிநீா் வரத்து காரணமாக கடந்த 23 ந்தேதி மேட்டூா் அணை நிரம்பியது.
இதனையடுத்து மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. கடந்த 2ஆம் தேதி அணையின் நீா் மட்டம் சரிந்த காரணத்தால் உபரிநீா் போக்கியில் வெளியேற்றப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் பாசனப்பகுதிகளில் தண்ணீா் தேவை அதிகரித்ததால் புதன்கிழமை காலைவரை நொடிக்கு 17,500 கனஅடிவீதம திறக்கப்பட்டு வந்த தண்ணீா் திறப்பு இன்று காலை நொடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும் பகல் 12 மணிக்கு நொடிக்கு 25 ஆயிரம் கனஅடியாகவும் மாலை 3 மணிக்கு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,311 கனஅடியாக இருந்தது. அணையின் நீா் மட்டம் 117.50 அடியாகவும், நீா் இருப்பு 89.53 டி.எம்.சியாகவும் இருந்தது.