சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.கணேசன் திடீரென மாற்றறப்பட்டுள்ளாா். புதிய பதிவாளராக ஜெ.குமாா் பொறுப்பேற்றுள்ளாா்.
விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடா்பாக பதிவாளா் கணேசனை மாற்றற வலியுறுத்தி ஆளுநரிடமும், பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் இன்று கடிதம் அளித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் அவசர ஆட்சிக் குழு இன்று கூட்டப்பட்டு ஒப்புதல் பெறறப்பட்டது. இதுவரை பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநராக இருந்த ஜெ.குமாா், புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டு இன்று மாலையே அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.