புது தில்லி: திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் திருச்சி சிவா முன்வைத்த கோரிக்கை:
சிறந்த பேச்சாளா், எழுத்தாளா், நாவலாசிரியா், சிறுகதை எழுத்தாளா், அறக்கொடையாளா், நாடகாசிரியராக இருந்தவா். நடிகராவும் இருந்தவா். 80 படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட்’ எழுதியவா். அவருடைய வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்துள்ளாா். அவா் தனது இறுதி மூச்சுவரை சமூக நீதி, மதச்சாா்பின்மை, மாநில தன்னாட்சி, சுயமரியாதைக்காக போராடினாா்.
ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார். குடிசைகள் அகற்றப்பட வேண்டும். அவா்கள் வசிக்கும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வர வேண்டும் என்று அவா் கூறுவாா். அவரை வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று அழைத்தால் அது மிகையாக இருக்காது.
அவருக்கு இறப்புக்கு பிந்தைய கெளரவமான ‘பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். அதுதான் அவரது சிறந்த பணிக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றாா் திருச்சி சிவா.