சிமென்ட் தயாரிப்பாளர் ஏசிசி லிமிடெட் நிறுவனத்தின் லாபம் கடந்த டிசம்பர் 31 ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 126% உயர்ந்து ரூ. 206 கோடிக்கு உள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு இந்நிறுவனத்தின் லாபம் ரூ .90.87 கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் இதன் நிகரலாபம் இரண்டு மடங்கிற்கு அதிகமாக உயர்ந்திருப்பது ஆய்வாளர்களின் கணிப்பை முறியடித்துள்ளது.
சராசரியாக இந்நிறுவனம் இந்த ஆண்டில் ரூ .185 கோடி லாபத்தை ஈட்டும் என தெரிவித்திருந்தனர். நிகர விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.