காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டைக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருகின்றனர்.
இதன் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா இருப்பது குறித்து ஜம்மு காஷ்மீரின் உளவுத்துறை அமைப்புகள் மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.