தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 275 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடந்த 3-வது ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில்
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபத் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 275 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 115 ரன்கள் எடுத்தார்.