5-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்ரிக்கா அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 275 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 
5-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்ரிக்கா அணிக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 275 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடந்த 3-வது ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் 

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபத் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. 

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 275 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 115 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com