மஹாசிவராத்திரியை முன்னிட்டு இன்று செவ்வாய் கிழமை இந்தியாவின் பங்கு மற்றும் நாணய சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
புதன்கிழமை வர்த்தகம் தொடங்கும். நேற்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 34,000 புள்ளிகளாக இருந்தது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 10,539 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.39 ஆக இருந்தது.