வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர்களுக்கும் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு எழுத வேண்டும். 2016- ம் ஆண்டு முதல் மருத்துவ மாணவர்ச் சேர்க்கை நீட் தேர்வு வழியாகவே நடைபெறுகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கவும் இனிமேல் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற வகையில் இந்திய மருத்துவக் கவுன்சில் புதிய விதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், 7,000 பேர், மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடு செல்கின்றனர். குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவுக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர். ஆனால், இந்த தகுதித் தேர்வை எழுதுவோரில், 15 சதவீதம் பேரே தேர்ச்சி பெறுகின்றனர். தேர்ச்சி பெறாதவர்கள், டாக்டராகப் பணிபுரிவதற்கான லைசென்ஸ் பெறாமலேயே, டாக்டராக பணியாற்றுகின்றனர்.
இதை தடுக்கும் வகையில்,நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவம் படிக்க வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற நடைமுறைக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.