கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சிவராத்திரியையொட்டி ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதையடுத்து சாமி தரிசனத்திற்கு கூடியிருந்த பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஒடினர்.
பின்னர் சிறிது நேரத்திலேயே கோயில் ஊழியர்கள் மற்றும் தரிசனத்திற்கு வந்தவர்கள் என அனைவரும் துரிதமாக செயல்பட்டு தீ அணைத்தனர். தீயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அணைக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.