புதுடெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி - பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ராகுல் காந்தி டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
வங்கிகளில் ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31-ம் தேதியே சி.பி.ஐ. அறிவித்தது. ஆனால் ஜனவரி 6-ம் தேதி நீரவ் மனைவி இந்தியாவில் இருந்து சென்றுள்ளார். மேலும் அவரது சகோதரர் நிஷால் மோடி ஜனவரி 1-ம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ராகுல் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவை கொள்ளையடிக்க நிரவ் மோடியின் ஆலோசனைகள்
1. பிரதமர் மோடியை கட்டிப்பிடி
2, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் மோடியுடன் இணைந்து காண வேண்டும். இதனை பயன்படுத்தி, 12 ஆயிரம் கோடியை திருடலாம்.
மல்லையா போல் வெளிநாட்ற்கு தப்பி செல்ல வேண்டும். அப்போது அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் என்று ராகுல் காந்தி கேலியாக விமர்சித்துள்ளார்.