பெங்களூரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
இதில் 20 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும், இதுவரை எட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.