ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்ரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்ரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

பாரமுல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 

பாரமுல்லா பகுதியில் பாதுகாப்புப்படையினர் மீது மறைந்த இருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலில் 2 முதல் 3 பயங்கரவாதிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

கடந்த சில நாள்களாக எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. ஜம்மு அருகே சஞ்சுவான் பகுதியிலுள்ள ராணுவ முகாமுக்குள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென புகுந்தனர். அந்த முகாமினுள் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் பதுங்கிக் கொண்டு, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, அந்தக் குடியிருப்பை சுற்றிவளைத்த ராணுவத்தினர், பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 அதிகாரிகள் உள்பட ராணுவத்தினர் 6 பேர் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com