திரிபுராவில் சட்டப் பேரவை தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள சட்டப் பேரவையின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது.
திரிபுராவில் சட்டப் பேரவை தேர்தல்:  வாக்குப் பதிவு தொடங்கியது

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள சட்டப் பேரவையின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து, அந்த மாநில சட்டப் பேரவைக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. 

சாரிலாம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமேந்திர நாராயண் தேவ் வர்மா கடந்த 5 நாள்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கான தேர்தல் மார்ச் மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. மீதமுள்ள 59 தொகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 

தோ்தலையொட்டி திரிபுராவில் உள்ள இந்தியா – வங்கதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இன்று பதிவாகக்கூடிய வாக்குகள் மார்ச் மாதம் 3ம் தேதி எண்ணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com