நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.வி.மணிமாறன் தெரிவித்துள்ளார்.
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். ஊதியம் சீரமைப்பு தொடர்பான ஆணைகளை தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமிய வங்கிகள் இனியும் காலதாமதம் செய்யாமல் அனுப்பி வைக்க வேண்டும்.
வங்கிகள் லாபம் ஈட்டினால் தான் ஊதிய உயர்வு என்ற விதிமுறையை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (மார்ச்) 25ம் தேதி இந்தியா முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.வி.மணிமாறன் வெளியிட்டுள்ளார்.