நடிகர் கமல்ஹாசன் இன்று நேரடி அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.
புதிய கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதை கவுரவமாக கருதுகிறேன் என்று கேரள முதல்வர் பினராயி தெரிவித்தார். ஜனநாயகத்தை கமல் காப்பார் என நம்புகிறேன் என்று கூறினார்.