மக்கள் நீதி மய்யம்: புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர்,
மக்கள் நீதி மய்யம்: புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்ஹாசன்

மதுரை:  நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், மற்றும் கொடியை அறிமுகம் செய்தர். 

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் அரசியல் பிரகடன மேடைக்கு கமல்ஹாசன் வந்தார். அவருடன் தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் மேடைக்கு வந்தனர்.. 

பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மைதானத்தில் அவரது கட்சிக் கொடியை கமல் ஏற்றிவைத்தார். விஸ்வரூபம் படத்தின் யாரென்று தெரிகிறதா பாடல் இசை பின்னணியில் ஒலிக்க கமல், தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். 

பின்னர் பேசிய அவர் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்றார்.  5 கைகள் இணைந்த வெள்ளை நிற கொடியை ஏற்றினார். இது தலைவர்கள் நிறைந்த அரங்கம். நான் உங்களின் கருவி என்று அறிவித்தார்.

மேலும் இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும். இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. இந்த சோற்றுப் பருக்கையை தொட்டுப்பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப் பாருங்கள். ஊழலில் தோய்ந்த கைகள் சுடும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com